அண்ணா பல்கலை துணை வேந்தராக எம்.கே. சூரப்பா நியமனம்
கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.கே,சூரப்பா அண்ணா பல்கலை துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா அண்ணா பல்கலை துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் ராஜாராம். இவரது பணி காலம் கடந்த 2016 மே 26ல் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து அந்த பதவிக்கு 2 வருடங்களாக துணைவேந்தர் யாரும் நியமிக்கப்படாத நிலையில், துணைவேந்தராக எம்.கே. சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று நியமித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் துணைவேந்தராக அவர் 3 ஆண்டுகள் இருந்திடுவார். இவர் ஐ.ஐ.டி. இயக்குநராக 6 ஆண்டுகள் பணியாற்றியவர். இந்திய அறிவியல் நிறுவனத்தில் 24 ஆண்டுகள் பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.
Advertisement
Advertisement
உலோக பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள சூரப்பா 150 ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். தனது 4 ஆய்வு கட்டுரைகளுக்கு காப்புரிமையும் பெற்றுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.