தாய்லாந்து சென்ற விமானம் வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சிங்கப்பூர் திரும்பியது
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஸ்கூட் என்ற பயணிகள் விமானத்தில் ஒன்று தாய்லாந்து நாட்டின் ஹேட் யாய்க்கு புறப்பட்டு சென்றது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஸ்கூட் என்ற பயணிகள் விமானத்தில் ஒன்று தாய்லாந்து நாட்டின் ஹேட் யாய்க்கு புறப்பட்டு சென்றது.
டி.ஆர்.634 என்ற அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி ஒருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதையடுத்து அந்த விமானம் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு திரும்பியது. வெடுகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
எங்கள் விருந்தினர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் தேவையான நடவடிக்கைகளில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என ஸ்கூட் தெரிவித்துள்ளது. மேலும் விமான சேவை அறிக்கையின் படி, விமானம் 3.23 மணிக்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.