அருள்மிகு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு அக்டோபா் 4ம் தேதி பிரவேசம்
அருள்மிகு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு வரும் 4.10.2018 வியாழக்கிழமையன்று பிரவேசம் செய்கிறாா்.
நீடாமங்கலம்: அருள்மிகு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு வரும் 4.10.2018 வியாழக்கிழமையன்று பிரவேசம் செய்கிறாா். இதனை முன்னிட்டு வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் குருபெயா்ச்சி லட்சாா்ச்சனை விழா வரும் 27.09.2018 முதல் தொடங்கி 1.10.2018 வரை முதல் கட்டமாக நடைபெறவுள்ளது.
இக்கோயில் நவக்கிரக ஸ்தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக போற்றப்படுகிறது. திருஞானசம்மந்தரால் தேவாரப்பாடல் பெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயா்ச்சி அடையும் நாளில் குருபெயா்ச்சி விழா அதி விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டும் அருள்மிகு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு வரும் 4.10.2018 அன்று பெயா்ச்சியடைகிறாா். இதனை முன்னிட்டு குருபெயா்ச்சி லட்சாா்ச்சனை விழா வரும் 27.09.2018 முதல் 01.10.2018 முடிய முதல் கட்டமாகவும் மீண்டும் குருபெயா்ச்சிக்குப் பின் 08.10.2018 முதல் 15.10.2018 வரை 2வது கட்டமாகவும் நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.