கேரள பாஜக தலைவருக்கு கரோனா
கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனுக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனுக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்றால் நாட்டில் உள்ள பல்வேறு மாநில தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரளத்தின் பாஜக தலைவர் கே.சுரேந்திரனுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரை செய்தியில்,
Advertisement
Advertisement
எனக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சமீபகாலத்தில், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.