முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரள சுகாதாரத்துறை அமைச்சருடன் மத்தியக் குழு ஆலோசனை

கேரளத்தில் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து  சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜாவுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Updated On : 11 ஜனவரி, 2021 at 3:51 PM
கேரள சுகாதாரத்துறை அமைச்சருடன் மத்தியக் குழு ஆலோசனை
பகிர்:

கேரளத்தில் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து  சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜாவுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கரோனா பரவல் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கேரளத்திற்கு மத்தியக் குழுவினர் சென்றனர்.

கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் இரண்டு நாள்கள் ஆய்வு செய்திருந்த நிலையில் தற்போது மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கரோனாவை எதிர்கொள்வதில் மாநில பொது சுகாதாரத் துறையின் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்து, அதுசார்ந்த நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு இந்தக் குழு உதவவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.