நாட்டில் ஒரே நாளில் புதிதாக 7,533 பேருக்கு கரோனா
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,533 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,533 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை 9,355 ஆக இருந்த தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை 7,533 ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,533 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,49 கோடியாக உள்ளது. மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,31,468 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 10,780 பேர் குணமடைந்துள்ளனர், மொத்தம் 4,43,47,024 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நேற்று 65,286 ஆக இருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை 53,852 ஆக அதிகரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.