முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியாவின் முதல் பெண் டி ஜி பி காஞ்சன் பட்டாச்சார்யா மறைவு!

பணி ஓய்வின் பின் அரசியல் ஆர்வம் காரணமாக ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து அக்கட்சி சார்பாக 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஹரித்வார் மக்களவைத் தொகுதி  உறுப்பினராகப் போட்டியிட்டு தோற்றார்.

Updated On : 27 ஆகஸ்ட், 2019 at 11:32 AM
பகிர்:

இந்தியாவின் முதல் பெண் டி ஜி பி எனும் சிறப்புக்குரியவரான காஞ்சன் செளதரி பட்டாச்சார்யா மும்பையில் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். திருமதி பட்டாச்சார்யா 1973 ஆம் ஆண்டு ஐ பி எஸ் பேட்ச்சில் பயிற்சி எடுத்துக் கொண்டு தேர்வான அதிகாரிகளில் ஒருவர். 2004 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் டி ஜி பி யாக பதவியேற்றுக் கொண்டபோது இந்தியாவின் முதல் பெண் டி ஜி பி எனும் சிறப்புக்குரியவராகி வரலாற்றில் இடம் பெற்றார். காஞ்சன் பட்டாச்சார்யா 2007 ஆண்டு அக்டோபர் 31 அன்று தம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

பணி ஓய்வின் பின் அரசியல் ஆர்வம் காரணமாக ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து அக்கட்சி சார்பாக 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஹரித்வார் மக்களவைத் தொகுதி  உறுப்பினராகப் போட்டியிட்டு தோற்றார்.

உத்தரகாண்ட் காவல்துறை தங்களது ட்விட்டர் பக்கத்தில் தங்களது முன்னாள் உயரதிகாரிகளில் ஒருவரான காஞ்சன் பட்டாச்சார்யாவுக்கு அவரது நினைவுகளையும், பணிக்காலத்தில் அவர் சிறப்பாக செயல்பட்ட தன்மையையும் போற்றி இரங்கலைப் பதிவு செய்துள்ளது.

Advertisement

Image Courtesy: The week
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.