முகப்பு
தற்போதைய செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 2 மடங்காக உயர்வு!

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:59 AM
பகிர்:

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்திருந்தார். 

அதன் அடிப்படையில், ஓய்வூதியத்தை உயர்த்து வழங்குவதற்கான பரிந்துரையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் அரசுக்கு அனுப்பி வைத்தார். 

Advertisement

இந்நிலையில், ஆணையத்தின் உறுப்பினர் செயலாளரின் பரிந்துரையை பரீசிலித்த தமிழக அரசு, விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

அதில், நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை ரூ.3000 இல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தி வழங்கப்படும். 

விளையாட்டு வீரர்களின் சாதனைகள் அங்கீகரித்து அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.