முகப்பு
தற்போதைய செய்திகள்

புதிய உச்சத்தில் தங்கம் விலை! இன்று எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சமாக வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

Updated On : 17 அக்டோபர் 2024, 10:23 am IST
சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 57,280-க்கு விற்பனை
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சமாக வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவது தங்கத்தை முதன்மை சேமிப்பாக நம்பியுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே இந்த விலை உயா்வு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக, தங்கம் விலை குறைந்து கொண்டே வந்து பவுன் ரூ.51 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆனால், தற்போது அதற்கு மாறாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.

Advertisement

Advertisement

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.57,120-க்கும், கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ. 7,140-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை(அக். 17) ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 57,280 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.7,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பண்டிகை காலங்கள் என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயருமே தவிர குறைய வாய்ப்பில்லை. கூடிய விரைவில் தங்கம் விலை பவுன் ரூ.58 ஆயிரத்தை தொடும் என தங்கம் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

வெள்ளி விலையிலும் எந்தவித மாற்றமும் இல்லை. வெள்ளி கிராம் ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments