சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 57,280-க்கு விற்பனை 
தற்போதைய செய்திகள்

புதிய உச்சத்தில் தங்கம் விலை! இன்று எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சமாக வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சமாக வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவது தங்கத்தை முதன்மை சேமிப்பாக நம்பியுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே இந்த விலை உயா்வு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக, தங்கம் விலை குறைந்து கொண்டே வந்து பவுன் ரூ.51 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆனால், தற்போது அதற்கு மாறாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.57,120-க்கும், கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ. 7,140-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை(அக். 17) ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 57,280 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.7,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பண்டிகை காலங்கள் என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயருமே தவிர குறைய வாய்ப்பில்லை. கூடிய விரைவில் தங்கம் விலை பவுன் ரூ.58 ஆயிரத்தை தொடும் என தங்கம் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

வெள்ளி விலையிலும் எந்தவித மாற்றமும் இல்லை. வெள்ளி கிராம் ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT