முகப்பு
தற்போதைய செய்திகள்

வேலு நாச்சியார், கட்டபொம்மன் பிறந்த நாள்: ஆளுநர் மரியாதை!

வேலு நாச்சியார், கட்டபொம்மன் பிறந்த நாளுக்கு ஆளுநர் மரியாதை.

Updated On : 3 ஜனவரி 2025, 2:26 pm IST
வேலு நாச்சியார், கட்டபொம்மன் பிறந்த நாளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் ஆளுநர் ஆர்.என். ரவி.
பகிர்:

வீரமங்கை வேலு நாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் உள்ள இருவரின் திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தில் முக்கிய பங்கு வகித்த இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை என்று அழைக்கப்படும் வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த நாள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த இன்று(ஜன. 3) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் இருவருக்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”வீரமங்கை வேலு நாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளில் இருவருக்கும் தேசம் மரியாதை செலுத்துகிறது.

வீரம், ஞானம் மற்றும் தேசபக்தியின் உருவகங்களான இருவரும் தங்களின் ஒப்பிடமுடியாத ராணுவம் மற்றும் மூலோபாய சாதுர்யத்துடன், அடக்குமுறை பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக உறுதியுடன் போராடியது, தேசிய சுதந்திரத்துக்கான முதலாவது போராட்டத்தை தூண்டியது.

அவர்களின் நீடித்த மரபு, தேசத்தைக் கட்டியெழுப்ப நடந்து வரும் பயணத்தில் சுதந்திரம் மற்றும் நீதிசார் லட்சியங்களை நிலைநிறுத்த பல தலைமுறைகளுக்கும் வழிகாட்டியாக விளங்கி தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.” என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments