முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒரே நாளில் 3 கிளர்ச்சியாளர்கள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 20 மார்ச் 2025, 11:01 am IST
கோப்புப் படம் - PTI
பகிர்:

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் வெவ்வேறு அமைப்பைச் சேர்ந்த 3 கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்னௌபால் மாவட்டத்தில் காங்லெய் யாவோல் கன்னா லுப் எனும் அமைப்பைச் சேர்ந்த லைஷ்ராம் தோம்பா சிங் (வயது 27) மற்றும் யும்னாம் ரோஷன் மெதெய் (33) ஆகிய இருவரை நேற்று (மார்ச் 19) பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், அவர்களிடமிருந்து ஒரு ஏகே-47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் அதன் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: தில்லி: அக்பர் சாலை பெயர்ப் பலகையில் கருப்பு மை பூசிய ஹிந்து அமைப்பினர்!

இதேபோல், பிஷ்னுப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் அரசு ஊழியர்களை மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபட்டு வந்த தடை செய்யப்பட்ட சோசியலிஸ்ட் ரெவாலியூஷனரி பார்ட்டியை (எஸ்.ஒ.ஆர்.இ.பி.ஏ.) எனும் அமைப்பை சேர்ந்த சலாம் ப்ரோஜன் சிங் (47) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, எஸ்.ஒ.ஆர்.இ.பி.ஏ. அமைப்பின் பெயரில் வெளியிடப்பட்ட 8 மிரட்டல் கடிதங்களையும், சலாமிடம் இருந்து பிஷ்னுப்பூர் மாவட்டத்திலுள்ள 38 பள்ளிக்கூடங்களின் பட்டியலையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments