கோவையில் வேட்பாளர்களை தனித்தனியாக சந்தித்த முதல்வர் மருமகன் சபரீசன்!
கோவையில் திமுக வேட்பாளர்களை முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தனித்தனியாக சந்தித்தது குறித்து...
Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:39 PM
கோவை: கோவையில் வேட்பாளர்களை முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தனித்தனியாக சந்தித்து பேசினார்.
கோவை மற்றும் திருப்பூரில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியில் எவ்வித பொறுப்பிலும் இல்லாத முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கோவையில் பந்தய சாலையில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் தற்காலிக வீட்டில் வேட்பாளர்களை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார். அதேபோன்று திருப்பூரிலும் வேட்பாளர்களை சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே, ரூ.8000 போலி கூப்பன் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதல்வரின் மருமகனான சபரீசன் கோவை மற்றும் திருப்பூரில் வேட்பாளர்களை நேரில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:44 PM
summary
Chief Minister Stalin's son-in-law, Sabareesan, met with candidates individually in Coimbatore
Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:44 PM