சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!
சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடகம் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பங்கேற்து குறித்து...
காங்கிரஸ் வேடபாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய கோவை வந்த கர்நாடகம் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், சபரீசன் நடத்திய களப்பணி ஆலோசனையில் பங்கேற்றார்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவை மாவட்டம் ஏப்ரல் 18-ஆம் தேதி மாபெரும் அரசியல் போா்க்களமாக மாறவுள்ளது. நாட்டின் முக்கியத் தலைவா்களான பிரதமா் நரேந்திர மோடியும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும் ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் பிரசாரம் செய்யவிருப்பது தோ்தல் களத்தை உச்சகட்டப் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சரியாக ஒருவாரம் இருக்கும் நிலையில், பரிசு கூப்பன்கள் மற்றும் பரிசுப் பொருள்களை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் மறைமுகமாக விநியோகித்து வருகின்றன.
Advertisement
இந்த நிலையில், கோவை மற்றும் திருப்பூர் தேர்தல் கள நிலவரம் குறித்து கட்சியில் எந்தவித பொறுப்பிலும் இல்லாத முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கோவையில் பந்தய சாலையில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் தற்காலிக வீட்டில் திமுக வேட்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த களப்பணி ஆலோசனையில் காங்கிரஸ் வேடபாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய கோவை வந்த கர்நாடகம் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பங்கேற்றார்.