தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்
வாக்குச்சாவடியில் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், துயரத்தில் அவரது தாயும் இறந்தது குறித்து...
சேலம்: வாக்குச்சாவடியில் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழந்தாா். இந்த துயரத்தில் அவரது தாயும் வெள்ளிக்கிழமை காலை இறந்தார். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சேலம் மேற்கு தொகுதிக்கு உள்பட்ட தாரமங்கலம் அருகே அத்திக்காட்டானூா் வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த திமுக தொண்டா் மாரியப்பன் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்ததாக, அவரது உறவினரான கே. தங்கவேலு தெரிவித்தார்.
தகவல் அறிந்த சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா. ராஜேந்திரன், அவரது வீட்டிற்கு சென்று மாரியப்பன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
Advertisement
இந்த நிலையில் மகன் இறந்த துயரத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்த மாரியப்பனின் தாய் பழனியம்மாள் வெள்ளிக்கிழமை காலை இறந்தாா்.
இதையறிந்த அமைச்சா் ராஜேந்திரன், அங்கு சென்று மாரியப்பனின் தாய் பழனியம்மாளின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா், மாரியப்பனின் மனைவி ராதாவிடம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவியை வழங்கினாா்.
அப்போது, தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா். மேலும், கட்சித் தொண்டர்கள், அந்த பகுதி மக்கள் பெருந்திரளாகக் கூடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
திமுக தொண்டா் மற்றும் அவரது தாய் இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.