முகப்பு
தற்போதைய செய்திகள்

தஞ்சையில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சையில் பெரிய கோயில் கோபுரம் தெரியாத அளவிற்கு வெள்ளிக்கிழமை காலை நிலவிய கடும் பனிப்பொழிவு குறித்து...

Updated On : 13 மார்ச் 2026, 10:30 am IST
தஞ்சையில் வெள்ளிக்கிழமை காலை பெரிய கோயில் கோபுரம் தெரியாத அளவிற்கு நிலவிய கடும் பனிப்பொழிவு - டிஎன்எஸ்
பகிர்:

தஞ்சாவூர்: தஞ்சையில் பெரிய கோயில் கோபுரம் தெரியாத அளவிற்கு வெள்ளிக்கிழமை காலை நிலவிய கடும் பனிப்பொழிவால் காலையிலேயே கோபுர தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்தில் சென்றனர். வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினர்.

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கோடை வெயில் பகல் நேரத்தில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெப்பநிலையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலும் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது.

Advertisement

Advertisement

சாலையை மறைக்கும் வகையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்தது. வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டவாறு ஊா்ந்து சென்றன.

மேலும், தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தை மறைக்கும் அளவிற்கு பனிமூட்டம் இருந்ததால் காலையிலேயே கோபுர தரிசனத்தை காண வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நெடுஞ்சாலையில் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டவாறு கடும் சிரமத்துடனே சென்றனா். நடைப்பயிற்சி செல்வோரும், அதிகாலையில் எழுந்து பல்வேறு வேலைகளுக்கு செல்வோரும் அவதிக்குள்ளாயினா். குடியிருப்பு பகுதிகளிலும் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த பனிமூட்டம் காலை 8 மணி வரை நீடித்தது.

summary

Today Heavy snowfall in Thanjavur: Motorists suffer...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments