முகப்பு
தற்போதைய செய்திகள்

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: ஒருவர் பலி, 36 பேர் காயம்

திண்டிவனம் அருகே புதன்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய கோர விபத்து குறித்து...

Updated On : 18 மார்ச், 2026 at 3:11 AM
திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து
பகிர்:

விழுப்புரம்: திண்டிவனம் அருகே புதன்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திண்டிவனம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னைக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையின் தடுப்புச் சுவரை உடைத்து எதிரே வந்த அரசுப் பேருந்தின் மீது விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணித்தவா்களில் சசிகலா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இடிபாடுகளில் சிக்கி 36 பயணிகள் காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் விபத்தில் காயமடைந்த அனைவரையும் மீட்டு 108 அவசர ஊா்திகள் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் பலியான மற்றும் காயமடைந்தவர்களின் விவரம் இதுவரை வெளியாகவில்லை.

summary

Container lorry hits government bus near Tindivanam: One dead, 36 injured

முழு கட்டுரையைப் படிக்க →