புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது குறித்து...
புச்சேரியில் 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 6 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வந்துள்ள முகவர்கள், அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு செல்போன் உள்ளிட்ட சாதனங்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 91.23 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைக்கப்பட்ட நிலையில், திங்கள் காலை 8 மணி அளவில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகளும், அதனைத் தொடர்ந்து 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள 6 மையங்களில் இந்த தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மையத்திற்குள் வரும் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டுள்ளனர்; குறிப்பாக செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த பணிகள் மிகவும் துல்லியமாக நடைபெற்று வருகின்றன.
Advertisement