சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!
சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்...
சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் இன்று(ஏப். 30) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் 85.15% வாக்குகள் பதிவாகின.
இதையடுத்து மே 4 அன்று தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
Advertisement
தமிழகத்தில் மே 4 அன்று 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் அதுகுறித்த முன்னேற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் சாய்குமார் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இன்று சென்னையில் பயிற்சி வழங்கப்படுகிறது.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலுக்கான வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலை. வளாகம், ராணி மேரி கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் நடக்க உள்ளன. இதையடுத்து சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு வள்ளுவர் கோட்டம் வளாகத்தில் பயிற்சி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.