விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
தவெக ஆட்சி அமைப்பதற்கு விஜய் ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருப்பது...
தவெக ஆட்சி அமைப்பதற்கு அந்த கட்சியின் தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைக்க முயற்சி செய்து வருகிறது.
இதனிடையே, தமிழகத்தில் ஆட்சியமைக்க மதவாத சக்திகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் தவெகவுக்கு காங்கிரஸ் தேசிய தலைமை ஆதரவு அளித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், விஜய்யை ஆட்சி அமைப்பதற்கு தமிழ்நாடு ஆளுநர் இதுவரை அழைக்காதது அதிர்ச்சியளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் பக்க பதிவில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், அந்த கட்சியின் தலைவர் விஜய்யை ஆட்சி அமைப்பதற்குத் தமிழக ஆளுநர் இதுவரை அழைக்காதது அதிர்ச்சியளிக்கிறது.
ஜனநாயகத்தின் நலன் கருதி, தமிழக ஆளுநர் உடனடியாக விஜய்யை மாநில அமைச்சரவையை அமைக்க அழைப்பதோடு, அவரே முதல்வராகப் பொறுப்பேற்று, பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
The Governor of Tamil Nadu immediately invite the TVK leader to form the State Cabinet and himself be invited by the Governor to be made Chief Minister and prove his majority on the floor of the Assembly.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.