முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.400 உயா்ந்தது குறித்து...

தங்கம் விலை உயர்வு - கோப்புப் படம்
பகிர்:

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.1,13,200-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த மே 4-இல் விலையில் மாற்றமின்றி பவுன் ரூ.1,12,000-க்கும், மே 5-இல் பவுனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.1,10,560-க்கும் விற்பனையானது.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை இரண்டு முறை விலை உயர்ந்தது. காலை கிராமுக்கு ரூ.230, மாலை கிராமுக்கு மேலும் ரூ.50 உயர்ந்து ரூ.14,100-க்கும், பவுனுக்கு ரூ.2,240 உயா்ந்து ரூ.1,12,800- க்கு விற்பனையானது.

Advertisement

இந்த நிலையில், தங்கம் விலை வியாழக்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ,14,150-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,13,200-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை புதன்கிழமை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.270-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயா்ந்து ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையான நிலையில், வியாழக்கிழமை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது.

summary

Gold prices rise by Rs.400 per sovereign, selling at Rs.1,13,200

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.