தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?
சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.400 உயா்ந்தது குறித்து...
சென்னை: சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.1,13,200-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த மே 4-இல் விலையில் மாற்றமின்றி பவுன் ரூ.1,12,000-க்கும், மே 5-இல் பவுனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.1,10,560-க்கும் விற்பனையானது.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை இரண்டு முறை விலை உயர்ந்தது. காலை கிராமுக்கு ரூ.230, மாலை கிராமுக்கு மேலும் ரூ.50 உயர்ந்து ரூ.14,100-க்கும், பவுனுக்கு ரூ.2,240 உயா்ந்து ரூ.1,12,800- க்கு விற்பனையானது.
Advertisement
இந்த நிலையில், தங்கம் விலை வியாழக்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ,14,150-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,13,200-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை புதன்கிழமை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.270-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயா்ந்து ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையான நிலையில், வியாழக்கிழமை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது.