கடும் வறட்சி களக்காடு தலையணை மூடல்: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
களக்காடு மலைப் பகுதியில் மழையின்றி வறட்சி நிலவுவதால், களக்காடு தலையணை மூடல் குறித்து...
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் மழையின்றி வறட்சி நிலவுவதால், இங்குள்ள தலையணை ஆறு வறண்டது.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் மழையின்றி வறட்சி நிலவுவதால், இங்குள்ள தலையணை ஆறு வறண்டது. இதனால், தலையணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை தடை விதித்துள்ளது.
களக்காடு புலிகள் காப்பகத்தில் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயில் ஆகிய சுற்றுலாப் பகுதிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால் தலையணை ஆறு, நம்பி கோயில் நம்பியாற்றில் எப்போதும் தொடர்ந்து நீர்வரத்து இருந்து வந்தது.
Advertisement
இந்த நிலையில், மலைப் பகுதியில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வறட்சி நிலவி நீர்வரத்து குறைவாக இருப்பதால் தற்போது தலையணை பச்சையாற்றில் தடுப்பணைக்கு உள்பகுதியில் குட்டை போன்று தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது.
இதையடுத்து, களக்காடு துணை இயக்குநர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவின்பேரில், தலையணை புதன்கிழமை(மே. 6) மூடப்பட்டது. அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். மலைப்பகுதியில் மழை பெய்தால் மட்டுமே தலையணை ஆற்றில் நீர்வரத்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு வனக்கோட்டம், களக்காடு வனச்சரகத்திற்குள்பட்ட களக்காடு தலையணை சூழல் சுற்றுலாப் பகுதியில் மே.6 முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்தும், பார்வையிடவும் தடை விதித்துள்ளது.