முகப்பு
தற்போதைய செய்திகள்

விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு!

தவெக தலைவா் விஜய் வியாழக்கிழமை மீண்டும் ஆளுநரை சந்தித்து தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரிக்கை...

மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய தவெக தலைவர் விஜய். - ஏஎன்ஐ
பகிர்:

சென்னை: தவெக தலைவா் விஜய் ஆளுநரை புதன்கிழமை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை நிலையில், வியாழக்கிழமை மீண்டும் ஆளுநரை சந்தித்து தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும். பேரவையில் பெரும்பான்மையை நிரூப்பிப்போம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து புதன்கிழமை இன்று (மே 6) உரிமை கோரிய நிலையில், ஆதரவு எம்.எல்.ஏக்களின் முழுப் பட்டியல் கொடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தரப்பில் கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், அறுதிப் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்பதால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகளுக்கு தவெக ஆதரவு கோரி கடிதம் மூலம் அழைப்பு விடுத்தது.

Advertisement

இதில், காங்கிரஸ் 5 இடங்களிலும், இடதுசாரிகள் தலா 2 இடங்களிலும், விசிக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுகவுடனான கூட்டணியை முறித்து கொண்ட காங்கிரஸ், தவெகவுக்கு திடீா் ஆதரவு அளித்தது. இதைய.டுத்து தவெகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 112 ஆக உயந்துள்ளது. எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் 6 உறுப்பினர்கள் தேவை உள்ளது.

இந்த நிலையில், ஆதரவு உறுப்பினர்களின் முழுப் பட்டியலை கொடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தரப்பில் தவெகவிடம் கோரப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி விஜய் வியாழக்கிழமை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை.

இதையடுத்து ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் தவெக தொடர்ந்து விசிக, கம்யூனிட்டுகள் உள்ளிட்ட கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே, திடீர் திருப்பமாக வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் புதுச்சேரி புதுகுப்பத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு

இந்த நிலையில், ஆளுநரை புதன்கிழமை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை நிலையில், பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று (மே 7) விஜய் மீண்டும் சந்தித்து அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என தெரிவித்துள்ளார்.

summary

TVK leader Vijay met the Governor again on Thursday to request that his party—as the single largest party—be invited to form the government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.