பிளஸ் 2 தேர்வு முடிவு: கடலூர் மாவட்டம் 95.57% தேர்ச்சி!
பிளஸ் 2 தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் கடலூர் மாவட்டம் 19 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது குறித்து...
நெய்வேலி: பிளஸ் 2 தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் கடலூர் மாவட்டம் 19 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் கடலூர் வருவாய் மாவட்டத்தில் 117 அரசு பள்ளிகள், 30 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 101 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட 248 பள்ளிகளில் இருந்து 14,919 மாணவர்கள் 14,478 மாணவிகள் உள்பட்ட மொத்தம் 28,518 மாணவர் மாணவிகள் தேர்வு எழுதினார்.
இவர்களில் 14,040 மாணவர்களும், 14,478 மாணவிகளும் என மொத்தம் 28,518 தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 94.11%, மாணவிகளுக்கு 97.03% மொத்த தேர்ச்சி 95.57 சதவீதம். மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 93.23 சதவீதம்.
Advertisement
கடலூர் மாவட்டத்தில் மார்ச் 2025-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் 96.06 சதவீதமும், நிகழாண்டு 95.57 சதவீதமாக குறைந்துள்ளதை அடுத்து இந்த ஆண்டு 19-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாநில அளவில் 10 -ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.