முகப்பு
தற்போதைய செய்திகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: கரூர் மாவட்டத்தில் 92.21% தேர்ச்சி

கரூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 92.21% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளது குறித்து....

கரூர் மாவட்டத்தில் 92.21% தேர்ச்சி - கோப்புப்படம்
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கரூர் மாவட்டத்தில் 92.21 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) காலை வெளியாகின. இந்தத் தேர்வில் 94.31 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

கடந்த மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்.6 ஆம் தேதி வரை நடைபெற்ற. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை, கரூர் மாவட்டத்தில் 187 பள்ளிகளைச் சேர்ந்த 5474 மாணவர்கள், 5628 மாணவிகள் என மொத்தமாக 11,102 பேர் எழுதினர்.

Advertisement

Advertisement

இவர்களில் 4,924 மாணவர்கள், 5,313 மாணவிகள் என மொத்தம் 10,237 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இது 92.21 சதவிகிதத் தேர்ச்சியாகும். மாவட்டத்தில் 64 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

summary

Regarding the 92.21% pass rate achieved by students in the 10th public examinations in Karur district...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.