தவெகவிற்கு விசிக ஆதரவா? - திருமாவளவன் விளக்கம்!
தவெகவிற்கு விசிக ஆதரவு அளிக்கிறதா என்பதை சனிக்கிழமை காலை(மே 9) அறிவிப்பதாக தொல்.திருமாவளவன் தெரித்திருப்பது...
தவெகவிற்கு விசிக ஆதரவு அளிக்கிறதா என்பதை சனிக்கிழமை காலை(மே 9) அறிவிப்பதாக தொல். திருமாவளவன் தெரித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் கூறியதாவது:
தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டியது எனது பொறுப்பு. இன்று மாலை (மே 8) கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடக்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். அந்த கூட்டத்தில் சமீபத்திய அரசியல் நெருக்கடி குறித்து முன்னணி தோழர்களோடு கலந்தாய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என நாங்கள் அறிவித்திருக்கிறோம்.
Advertisement
Advertisement
அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு இணையவழி உயர்நிலைக் குழு கூடுகிறது.
ஜனநாயக முறைப்படி கட்சியில் பேசுவது என்பது வழக்கமான ஒன்றுதான். எந்தவொரு முடிவாக இருந்தாலும் கட்சித் தலைவர் என்கிற முறையில் எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், நிர்வாகிகளின் கருத்துகளை அறிய வேண்டியது, அவர்களது உணர்வுகளை மதிக்க வேண்டியது எனது பொறுப்பு, கடமை. ஆகவே, இன்று மாலை 5 மணியளவில் இணையவழியாக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
உயர்நிலைக்குழு கூட்டத்துக்கு பின்னர் எங்களது முடிவை நாளை(மே 9) செய்தியாளர்கள் சந்திப்பில் முறைப்படி அறிவிப்போம் என்றார்.
மு.க. ஸ்டாலின் என்ன சொன்னார்?
மேலும், திமுக கூட்டணி மக்களின் தீர்ப்பை மதிக்கிறது. தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க இடையூறாக இருக்க மாட்டோம். மக்களுடைய தீர்ப்பை தலைவணங்க வேண்டியது நமது கடமை என மு.க. ஸ்டாலின் கூறியதாக திருமாவளவன் தெரிவித்தார்.
தவெகவுக்கு விசிக ஆதரவளித்தால் அதற்கு திமுக தலைவர் இடையூறு தராமல் இருப்பாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இது ரொம்ப அதிதமான, யூகமான கேள்வி. நாங்கள் இன்னும் எங்கள் நிலைப்பாட்டை எடுக்கவே இல்லை. எடுக்காதபோது நீங்கள் ஒரு யூகமான கேள்வி கேட்பது சரியல்ல. எங்களது முன்னணி தோழர்களோடு கலந்து பேசி அதன்பிறகு நாங்கள் எடுக்கும் முடிவையொட்டி நீங்கள் கேள்வி எழுப்பலாம் என்று அவர் கூறினார்.
Thol. Thirumavalavan stated that the VCK would announce on Saturday morning (May 9) whether it is extending its support to the TVK.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.