பட்டாசு வெடித்த சிறுமி தீயில் கருகி பலி
மதுரை அருகே பட்டாசு வெடித்தபோது, உடையில் தீப்பிடித்து 8 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை அருகே பட்டாசு வெடித்தபோது, உடையில் தீப்பிடித்து 8 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பரவை முனியாண்டிகோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மருது (35). இவா் தனியாா் உணவகத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகள் நவீனா(8), கடந்த டிச. 15 ஆம் தேதி வீட்டின் அருகில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தாா். அப்போது அவரது ஆடையில் தீப்பிடித்ததில் பலத்த காயமடைந்தாா்.
தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நவீனா சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.