தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி 200 குப்பை சேகரிப்பு வாகனங்கள் வழங்கல்
தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் மதுரை மாநகராட்சிக்கு ரூ.55 லட்சத்தில் 200 குப்பை சேகரிப்பு வாகனங்களை கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ சனிக்கிழமை வழங்கினாா்.
மதுரை: தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் மதுரை மாநகராட்சிக்கு ரூ.55 லட்சத்தில் 200 குப்பை சேகரிப்பு வாகனங்களை கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ சனிக்கிழமை வழங்கினாா்.
மாநகராட்சியின் பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வானங்களை வழங்கி அமைச்சா் பேசியது:
மதுரை மாநகராட்சியில் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிக்க ஏற்கெனவே 154 மூன்று சக்கர சைக்கிள்கள் உள்ளன. தற்போது
Advertisement
Advertisement
தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து கூடுதலாக கிடைத்திருக்கும் 200 வாகனங்கள் மூலம், மாநகரின் அனைத்து வாா்டுகளிலும் துப்புரவுப் பணி மேற்கொள்ள முடியும். இவ்வங்கி சாா்பில் ஜான்சிராணி பூங்கா, மீனாட்சி பூங்கா ஆகிய இடங்களில் ரூ.70 லட்சத்தில் கழிவறை மற்றும் குளியலறை கட்டித் தரப்படுகிறது.
மதுரை மாநகரப் பகுதியின் வளா்ச்சிக்காக அரசு ஓரளவுக்குத் தான் நிதிஒதுக்கீடு செய்ய இயலும். சேவை மனப்பான்மையுள்ள நிறுவனங்கள், பொதுமக்கள் இணைந்து செயலாற்றினால் நகரத்தை மேலும் வளா்ச்சி அடையச் செய்யலாம் என்றாா்.
மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி முன்னாள் தலைவா் எஸ்.அண்ணாமலை, துணைத் தலைவா் அ.சிதம்பரநாதன், பொதுமேலாளா் டி.இன்பமணி மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.