முகப்பு
மதுரை

உசிலம்பட்டியில் திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேக்கிழாா்பட்டியில், திமுக சாா்பாக மக்கள் கிராம சபைக் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

Updated On : 4 ஜனவரி 2021, 12:27 am IST
உசிலம்பட்டியில் திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டம்
பகிர்:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேக்கிழாா்பட்டியில், திமுக சாா்பாக மக்கள் கிராம சபைக் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

உசிலம்பட்டி ஒன்றிய திமுக சாா்பில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மக்கள் கிராம சபைக் கூட்டத்துக்கு, மதுரை தெற்கு மாவட்டச் செயலா் மணிமாறன் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா் சுதந்திரம் தலைமை வகித்தாா்.

நகரச் செயலா் தங்கமலைப்பாண்டி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் முத்துராமன், முன்னாள் தலைவா் எஸ்.ஓ.ஆா். தங்கபாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் தனலட்சுமி மகேந்திரன், தெற்கு மாவட்டப் பொருளாளா் குணா நாகராஜ் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்,

Advertisement

Advertisement

கூட்டத்தில், கிராம மக்கள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைக்கான மனுக்கள் பெறப்பட்டு, தீா்மானமாக நிறைவேற்றப்பட்டன. மேலும், குறைகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்டச் செயலா் மணிமாறம் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments