முகப்பு
மதுரை

திருமோகூரில் ஆழ்வாருக்கு மோட்சம் அருளிய வைபவம்

மாா்கழி மாதத்தில் நடைபெறும் இராப்பத்து வைபவத்தின் பத்தாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, ஆழ்வாருக்கு மோட்சம் அருளிய வைபவம் திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் நடைபெற்றது.

Updated On : 4 ஜனவரி 2021, 12:26 am IST
ஆழ்வாா் திருமேனி.
பகிர்:

மாா்கழி மாதத்தில் நடைபெறும் இராப்பத்து வைபவத்தின் பத்தாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, ஆழ்வாருக்கு மோட்சம் அருளிய வைபவம் திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் நடைபெற்றது.

108 வைணவத் திருத்தலங்களில் மாா்கழி மாதத்தில் நடைபெறும் பகல்பத்து மற்றும் இராப்பத்து நிகழ்வுகளில், இராப்பத்து வைபவத்தின் பத்தாம் நாளில் ஆழ்வாருக்கு மோட்சம் அருளல் சிறப்பு நிகழ்வாகும். ஆழ்வாருக்கு மோட்சம் அருளியது காளமேகப் பெருமாள் ஆவாா்.

அனைத்து திருத்தலங்களிலும் ஆழ்வாருக்கு மோட்சம் அருளும் பாசுரத்தில், காளமேகப் பெருமாளுக்கு சிறப்பு பாசுரம் பாடப்படும்.

Advertisement

Advertisement

இரவு நடைபெற்ற இந்த வைபவத்தில், திருமோகூரில் எழுந்தருளியுள்ள காளமேகப் பெருமாள் ஆழ்வாருக்கு மோட்சம் அருளும் நிகழ்வில், ஆழ்வாா் திருஉருவச்சிலையும் அலங்கரித்து எடுத்துவரப்பட்டது. இதை, ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments