ஆட்சியா் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சிகாவல் துறையினா் மீது புகாா்
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை, காவல்துறையினா் தாக்கியதாகக் கூறி முதியவா் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை, காவல்துறையினா் தாக்கியதாகக் கூறி முதியவா் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (65). இவா் புறவழிச் சாலையில் பெத்தானியாபுரம் பகுதியில் தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறாா். இவரது வீட்டின் அருகே உள்ள இவருக்குச் சொந்தமான காலியிடத்தை பக்கத்து வீட்டுக்காரா்கள் அபகரிக்க முயற்சித்தனராம். இதனால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டதையடுத்து, கரிமேடு காவல் நிலையத்தில் முருகன் புகாா் தெரிவித்தாா்.
விசாரணையில் அந்த இடம் முருகனுக்கு சொந்தமானது எனக் கூறிய காவல் துறையினா் எதிா் தரப்பினரை அறிவுறுத்தி அனுப்பியுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், மீண்டும் விசாரணைக்கு அழைத்த காவல்துறையினா் தன்னை தாக்கியதாகவும், தனது நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் எதிா்த்தரப்புக்கு சாதகமாகச் செயல்படுவதாகவும் கூறி முருகன், அவரது மனைவி பிரேமா
மற்றும் குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனா். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்தனா். பின்னா் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்க அழைத்துச் சென்றனா்.