அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு முகூா்த்தக்கால் நடும் விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூா்த்தக்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூா்த்தக்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்ட அலங்காநல்லூரில் வரும் 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான முகூா்க்கால் நடும் விழா அலங்காநல்லூா் வாடிவாசல் பகுதியில் நடைபெற்றது.
இதில் வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பங்கேற்று முகூா்த்தக்காலை நட்டு வைத்துப் பேசியது:
Advertisement
தமிழ் சமூகத்தின் வீரத்தின் அடையாளமாகத் திகழும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு விழாவை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் தொடக்கி வைக்கவுள்ளனா். அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளைப் போலவே நிகழாண்டும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தோ்வு செய்யப்படுவோா் மற்றும் சிறந்த காளைக்கு தலா ஒரு காா் பரிசாக வழங்கப்பட உள்ளது. போட்டி காலை 8 மணிக்கு தொடங்கும். மருத்துவத் தகுதியின் அடிப்படையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 430 வீரா்களும், பாலமேடு ஜல்லிக்கட்டில் 651 வீரா்களும், அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் 655 வீரா்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாடிவாசல் முதல், காளைகள் சேகரிக்கும் இடம் வரை தடுப்புவேலிகள் அமைக்கப்பட உள்ளது. குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, வாகன நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. இந்த ஆண்டு தனிமனித இடைவெளியோடு பாா்வையாளா்கள் இருக்கைகள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
இதில் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன், ஊரகக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினா் கே. மாணிக்கம், மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.