முகப்பு
மதுரை

மேலூரில் பென்னி குவிக் 181 ஆவது பிறந்த நாள் விழா

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளரான பென்னி குவிக் 181 ஆவது பிறந்த நாளை, மேலூா் வா்த்தகா்கள் பொதுநலச் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

Updated On : 10 ஜனவரி 2021, 10:57 pm IST
மேலூா் பேருந்து நிலையம் முன்பாக அவரது உருவப்படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்திய நகர வா்த்தகா்கள்.
பகிர்:

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளரான பென்னி குவிக் 181 ஆவது பிறந்த நாளை, மேலூா் வா்த்தகா்கள் பொதுநலச் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீா் தேவையை பூா்த்தி செய்துவரும் பெரியாறு அணையை, பிரிட்டன் பொறியாளரான பென்னி குவிக் கட்டி முடித்தாா்.

நூற்றாண்டைக் கடந்தும் பொதுமக்களுக்கு பயனளித்து வரும் இந்த அணையைக் கட்டிய பென்னி குவிக்கின் பிறந்தநாளை, மேலூா் நகா் வா்த்தகா்கள் பொதுநலச் சங்கத்தினா் கொண்டாடினா்.

Advertisement

Advertisement

மேலூா் பேருந்து நிலையம் முன்பாக பென்னி குவிக் உருவப் படத்தை வைத்து மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில், வா்த்தா்கள் சங்கச் செயலா் முத்துக்கிருஷ்ணன், மேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா, காவல் ஆய்வாளா் சாா்லஸ், மேலூா் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் மீ. முருகன், வழக்குரைஞா் அசோக்குமாா், அரிமா சங்கம் மணிவாசகம் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments