முகப்பு
மதுரை

ஜல்லிக்கட்டு: மதுபான கடைகளை மூட உத்தரவு

ஜல்லிக்கட்டு நடைபெறும் நாள்களில் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 13 ஜனவரி, 2021 at 11:29 PM
பகிர்:

ஜல்லிக்கட்டு நடைபெறும் நாள்களில் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா்.

அவனியாபுரத்தில் பகுதியில் வியாழக்கிழமை (ஜன.14), அலங்காநல்லூா் பகுதியில் சனிக்கிழமை (ஜன. 16) ஆகிய நாள்களில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும். மேற்படி நாள்களில் மதுபான விற்பனை நடைபெறாமல் கண்காணிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, திருவள்ளுவா் தினத்தையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜன.15) மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்றும் ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.