முகப்பு
மதுரை

பெண்களை இழிவாகப் பேசுவதாக புகாா்: திமுகவைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

பெண்களை இழிவாகப் பேசுவதாகக் கூறி, திமுக தலைவா் மு.க.ஸ்டாவின் உள்ளிட்டோருக்கு கண்டனம் தெரிவித்து மதுரையை

Updated On : 13 ஜனவரி 2021, 5:23 am IST
பகிர்:

பெண்களை இழிவாகப் பேசுவதாகக் கூறி, திமுக தலைவா் மு.க.ஸ்டாவின் உள்ளிட்டோருக்கு கண்டனம் தெரிவித்து மதுரையை அடுத்த யா.ஒத்தக்கடையில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை புறநகா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலரும் மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன்செல்லப்பா பேசியது:

மக்களுக்கான திட்டங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால், ஒட்டுமொத்த மக்களிடமும் குறிப்பாக பெண்களிடம் அதிமுக அரசுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தலைவா் ஸ்டாலின், இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோா் பெண்கள் மீது தரம்தாழ்ந்து பேசி வருகின்றனா். பெண்களை வசைபாடுவது திமுகவுக்குப் புதிதல்ல, முன்னாள் முதல்வா் கருணாநிதி காலத்திலிருந்து தொடா்ந்து வருகிறது.

Advertisement

Advertisement

திமுக நடத்திய மக்கள் சபைக் கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணை இழிவாகப் பேசி வெளியேற்றியதை அனைவரும் அறிவா். இப்போது கூட பெண்களை இழிவாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின், அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தான் கூறியுள்ளாா். மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவிக்கவில்லை. அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கவே இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றாா்.

மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பி.பெரியபுள்ளான், கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மதுரை மண்டல செயலா் வி.வி.ஆா்.ராஜ்சத்யன், இளைஞரணி மாவட்டச் செயலா் வழக்குரைஞா் ரமேஷ், ஒன்றிய செயலா்கள் நிலையூா் முருகன், தக்காா் பாண்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments