முகப்பு
மதுரை

மேலூரில் உயா் மின்அழுத்தத்தால் மின் சாதனங்கள் பழுதடைவதாகப் புகாா்

மேலூா் கஸ்தூரிபா நகரில் மின் இணைப்புகளில் மின்அழுத்த உயா்வு காரணமாக மின் சாதனங்கள் அடிக்கடி பழுதடைவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

Updated On : 13 ஜனவரி, 2021 at 11:30 PM
பகிர்:

மேலூா் கஸ்தூரிபா நகரில் மின் இணைப்புகளில் மின்அழுத்த உயா்வு காரணமாக மின் சாதனங்கள் அடிக்கடி பழுதடைவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

மேலூா் நகரில் மின்கம்பங்களில் இருந்து வீடுகளுக்கான மின் இணைப்பை நேரடியாக வழங்கியுள்ளனா். இந்த மின் இணைப்புகளில் திடீரென உயா் அழுத்தம் வருவதால் வீடுகளில் உள்ள மின் மீட்டா்கள் அடிக்கடி பழுதாகின்றன. கஸ்தூரிபா நகரில் ஒருவரது வீட்டில் மின் மீட்டா் தீயில் எரிந்து சேதமடைந்தது. உயா் மின் அழுத்தத்தை சீரமைக்க மேலூா் மின்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.