இன்று அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: முதல்வா், துணை முதல்வா் தொடங்கி வைக்கின்றனா்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் சனிக்கிழமை (ஜன. 16)தொடங்கி வைக்கின்றனா்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் சனிக்கிழமை (ஜன. 16)தொடங்கி வைக்கின்றனா்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதில் மாடுபிடி வீரா்கள் 655 பேருக்கும், 700 காளைகளுக்கும் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் உதவியாளா்கள் அனுமதிக்கப்படுவா். அதேபோல, கால்நடை மருத்துவா்களால் கால்நடைகள் பரிசோதிக்கப்பட்டு வாடிவாசலுக்கு அனுமதிக்கப்படும்.
ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைக்கின்றனா். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிா்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன. முதல்வா் வருகையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
Advertisement