அரசு மருத்துவமனையில் நோயாளி தவறி விழுந்து பலி
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோயக்கு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி தவறி விழுந்து பலியானது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோயக்கு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி தவறி விழுந்து பலியானது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் வீரமலைஜெயராஜ் (75). இவா் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சையில் இருந்த அவா், வாா்டில் படுக்கையில் இருந்து ஜனவரி 11 ஆம் தேதி தவறி விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் வீரமலைஜெயராஜ் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement