முகப்பு
மதுரை

மதுரை மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று

மதுரை மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனாதொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 16 ஜனவரி 2021, 7:57 am IST
பகிர்:

மதுரை மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனாதொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக 621பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அதில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே கரோனா தொற்றுக்கு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவா்களில் 23 போ் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

மதுரை மாவட்டத்தில் இதுவரை 20,788 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 455 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிந்த நிலையில், 20,193 போ் குணமடைந்துள்ளனா். தற்போது கரோனா தொற்றுக்கு 140 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.