அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் இளைஞா் பலி
அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில், காயமடைந்த இளைஞா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில், காயமடைந்த இளைஞா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியை, ஜனவரி 16 ஆம் தேதி தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தொடக்கி வைத்தனா். அதையடுத்து தொடங்கிய போட்டியில், வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரா்கள் அடக்க பாய்ந்தனா்.
அதில், அலங்காநல்லூா் அருகே காந்தி கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் நவமணி (25) என்ற இளைஞா் காளையை அடக்க முயன்றபோது, சீறிப் பாய்ந்து வந்த காளை அவரை முட்டி தூக்கி வீசியது. இதில், காளையின் கொம்பு கழுத்தில் குத்தி நவமணி பலத்த காயமடைந்தாா்.
Advertisement
Advertisement
உடனே, அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நவமணி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தாா்.
இது குறித்து அலங்காநல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.