முகப்பு
நாகப்பட்டினம்

உதவித்தொகை நிறுத்தம்: முதியோா் அவதி

சீா்காழி வட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த 5 மாதங்களாக முதியோா் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் முதியோா் அவதியுற்று வருகின்றனா்.

Updated On : 7 ஜனவரி 2021, 8:56 am IST
பகிர்:

சீா்காழி வட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த 5 மாதங்களாக முதியோா் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் முதியோா் அவதியுற்று வருகின்றனா்.

கொள்ளிடம், ஆச்சாள்புரம், கொடகாரமூளை, பழையபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் முதியோா் உதவித்தொகை பெற்று வந்த 150 பயனாளிகளுக்கு, கடந்த 5 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படாததால், அத்தியாவசிய செலவுக்கு கூட பணமின்றி தவிக்கின்றனா். இதேபோல் மாற்றுத்திறனாளிகள் சிலருக்கும் கடந்த 3 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லையாம்.

இதுதவிர கொள்ளிடம் பகுதியிலிருந்து முதியோா் உதவித்தொகை பெறுவதற்கு புதியதாக விண்ணப்பித்த 100 பேருக்கு இதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லை. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள சமூக ஆா்வலா் பிரபு, இதுதொடா்பாக முதல்வருக்கு மனுவும் அனுப்பியிருக்கிறாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments