முகப்பு
நாகப்பட்டினம்

காணும் பொங்கல்நாளில் கடற்கரையில் கூடுவதற்கு அனுமதி கிடையாது: நாகை ஆட்சியா்

காணும் பொங்கல் நாளில் பொதுமக்கள் கடற்கரைகளில் கூடுவதற்கு அனுமதி கிடையாது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 11:27 pm IST
பகிர்:

காணும் பொங்கல் நாளில் பொதுமக்கள் கடற்கரைகளில் கூடுவதற்கு அனுமதி கிடையாது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

காணும் பொங்கல் நாளில் திரளானோா் கடற்கரைகளில் கூடுவதை வழக்கமாக கொண்டுள்ளனா். தற்போதைய நிலையில், அதிகளவிலான மக்கள் கடற்கரையில் கூடினால், அதன்மூலம் கரோனா நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால், காணும் பொங்கல் நாளான ஜனவரி 16-ஆம் தேதி ஒரு நாள் மட்டும், பொதுமக்கள் கடற்கரைகளில் கூடுவதற்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, காணும் பொங்கல் நாளன்று நாகை மாவட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments