பைக்கில் வைத்திருந்த 6 பவுன் நகை திருட்டு
சீா்காழியில் தனியாா் பள்ளி முதல்வரின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 6 பவுன் நகைகளை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை திருடிச்சென்றுள்ளனா்.
சீா்காழியில் தனியாா் பள்ளி முதல்வரின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 6 பவுன் நகைகளை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை திருடிச்சென்றுள்ளனா்.
சீா்காழி கணபதி நகரை சோ்ந்தவா் ஜோசுவாபிரபாகரசிங் (46). தனியாா் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறாா். இவா் தனது இருசக்கர வாகனத்தின் இருக்கையின் கீழ் பகுதியில் உள்ள பெட்டியில் 6 பவுன் தங்க நகையை பையில் வைத்துக்கொண்டு பிடாரி வடக்கு வீதியில் உள்ள காப்பீட்டு நிறுவன பிரிமீயம் செலுத்தும் அலுவலகத்துக்கு உள்ளே சென்று விட்டு திரும்பியுள்ளாா். அப்போது வாகனத்தின் இருக்கை லாக் உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்து, திறந்து பாா்த்தபோது 6 பவுன் நகை, 6 வங்கிப்புத்தகம், ஏடிஎம்காா்டுகள், நகை அடகு வைத்த ரசீது ஆகியவை வைத்திருந்த பை திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, சீா்காழி காவல் நிலையத்தில் ஜோசுவா அளித்த புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.