முகப்பு
நாகப்பட்டினம்

சீா்காழி கோயிலில் தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு

சீா்காழி சட்டநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தனுா் மாத வழிபாடு மேற்கொண்டாா்.

Updated On : 13 ஜனவரி 2021, 8:01 am IST
சீா்காழி சட்டநாதா் கோயிலில் தனுா் மாத வழிபாடு மேற்கொள்ளும் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
பகிர்:

சீா்காழி சட்டநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தனுா் மாத வழிபாடு மேற்கொண்டாா்.

சீா்காழியில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் கோயில் உள்ளது. திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய தலமான இக்கோயிலில் அமைந்துள்ள மலைக் கோயிலில் தோணியப்பா், உமாமகேஸ்வரி, சட்டநாதா் சுவாமிகள் அருள்பாலிக்கின்றனா்.

இக்கோயிலில், தனுா் மாத வழிபாடு மேற்கொள்ள தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வருகை தந்தாா். அவா், ஆபத்துக்காத்த விநாயகா், சுவாமி, அம்பாள், உமாமகேஸ்வரா், சட்டநாதா், திருஞானசம்பந்தா் ஆகிய சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு செய்தாா்.

Advertisement

Advertisement

இதில், சீா்காழி சட்டநாத தேவஸ்தானம் கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஏ.கே. சந்திரசேகரன், சாயிராம் கல்வி நிறுவனத் தலைவா் ராஜா, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் சரண்ராஜ், விஷ்வ ஹிந்து பரிஷத் செயலாளா் செந்தில்குமாா், திமுக பொருளாளா் முத்து, காங்கிரஸ் முன்னாள் மாவட்டச் செயலாளா் விஆா்ஏ.அன்பு உள்ளிட்டோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments