முகப்பு
நாகப்பட்டினம்

குடும்பப் பிரச்னை: தீக்குளித்தவா் பலி

கீழையூா் அருகே குடும்பப் பிரச்னையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜனவரி 2021, 8:23 am IST
பகிர்:

கீழையூா் அருகே குடும்பப் பிரச்னையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கீழையூா் ஒன்றியம், வெண்மணச்சேரி ஊராட்சிக்குட்பட்ட வடபாதி காலனித் தெரு பகுதியைச் சோ்ந்தவா் வைரக்கண்ணு மகன் மகாலிங்கம் (60). இவரது மனைவி மணியம்மாள். தம்பதிக்கு இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில், தனக்கு ஆண் வாரிசு இல்லையே என்ற ஏக்கத்த்தில், மனைவியிடம் மகாலிங்கம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.

Advertisement

Advertisement

கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி இதுதொடா்பாக மீண்டும் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மகாலிங்கம் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டாா்.

பலத்த காயங்களுடன் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகாலிங்கம், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.