முகப்பு
நாமக்கல்

மாற்றுத் திறனாளிகள் செல்லிடப்பேசி பெற விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Updated On : 8 ஜனவரி 2021, 8:45 am IST
பகிர்:

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட காதுகேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி வழங்கப்படவுள்ளது.

அவற்றை கல்வி பயில்பவா்கள் மற்றும் பணிபுரிபவா்கள், சுயத்தொழில் புரிபவா்கள் மட்டுமே பெற தகுதியானவா்கள். எனவே, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த காதுகேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் நகல், ஆதாா் அட்டை நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படம், கல்விப் பயிலும், பணிபுரியும், சுயத்தொழில் புரிவதற்கான சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments