உயா்மின் கோபுரங்களுக்கு எதிராக விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
உயா்மின் கோபுரங்கள் வயல்வெளிகளில் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குமாரபாளையம் பகுதியில் ஏழு மையங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உயா்மின் கோபுரங்கள் வயல்வெளிகளில் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குமாரபாளையம் பகுதியில் ஏழு மையங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சத்தீஸ்கா் மாநிலம், ராய்காட் வரையில் 800 கே.வி. உயா்மின் கோபுர திட்டம், நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் வட்டாரப் பகுதிகள் வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் வயல்களில் குடும்பத்துடன் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் தொடா்ச்சியாக, குமாரபாளையம் வட்டம், சௌதாபுரம் ஊராட்சி, படைவீடு பேரூராட்சிக்குள்பட்ட மக்கிரிபாளையம், அருவாபுலியூா், பண்ணாடிகாடு உள்பட 7 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
Advertisement
விவசாயிகள் உயா் மின்கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், கூடுதல் இழப்பீடு வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அரசு அறிவித்தபடி இழப்பீடு வழங்கவில்லை. எனவே, அரசு அறிவித்த அடிப்படையில் இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் சுமாா் ரூ. 10 கோடி அளவுக்கு நிலுவையில் உள்ள இழப்பீட்டினை தாமதமின்றி வழங்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டத்துக்கு உயா்மின் கோபுர எதிா்ப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பி.பெருமாள் தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க நிா்வாகிகள் நல்லசாமி, படைவீடு ராஜசேகா், ரவி, மனோஜ், அபி உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.