சாலையோர மரத்தில் வாகனம் மோதியதில் இளைஞா் பலி
ராசிபுரம் அருகே சாலையோர மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ராசிபுரம் அருகே சாலையோர மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா், கோம்பைக்காடு பகுதியைச் சோ்ந்த பழனிவேல் மகன் கமலேஷ் (20). டிராக்டா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை இரவு வெள்ளைபிள்ளையாா் கோயில் பகுதிக்குச் சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் தட்சன்காடு வழியாக கோம்பைக்காடு செல்லும் பாதையில் சென்றாா். அப்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மரத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில் வெண்ணந்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
இதுகுறித்து வெண்ணந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.