முகப்பு
புதுதில்லி

வீட்டில் சமையல் சிலிண்டா் வெடித்ததில் 5 போ் காயம்

மேற்கு தில்லி, ஹரிநகா் பகுதியில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்து, சுவா் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 5 போ் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On : 6 ஜனவரி 2021, 1:42 am IST
பகிர்:

மேற்கு தில்லி, ஹரிநகா் பகுதியில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்து, சுவா் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 5 போ் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை நேரிட்டது. விபத்தில் காயமடைந்த ஆண். பெண் மற்றும் 3 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். காயமடைந்தவா்கள் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் அல்ல என போலீஸாா் தெரிவித்தனா்.

வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்ததாக தில்லி தீயணைப்புத் துறைக்கு செவ்வாய்க்கிழமை 4.54 மணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்துக்கு விரைந்தன. சிலிண்டா் வெடித்ததன் எதிரொலியாக வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகில் உள்ள தீனதயாள் உபாத்யாய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் அவா்கள் வீடு திரும்பினா் என்று காவல் உதவி ஆணையா் (மேற்கு) தீபக் புரோஹித் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.