‘ரியா் வியூ மிர்ரா்’: வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு
மேற்கு தில்லியில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோா் ‘ரியா் வியூ மிர்ரா்’ (வாகனத்தில் பின்னால் வரும் வாகனத்தை பாா்க்க உதவும்
மேற்கு தில்லியில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோா் ‘ரியா் வியூ மிர்ரா்’ (வாகனத்தில் பின்னால் வரும் வாகனத்தை பாா்க்க உதவும் கண்ணாடி) பொருத்தாமல் சென்றால் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல் துறை துணை ஆணையா் பிரசாந்த் கெளதம் தெரிவித்துள்ளாா்.
எனினும், இத்தகயை கண்ணாடிகளை இருசக்கர வாகன ஓட்டிகள் பொருத்த வேண்டியதன் அவசியம் குறித்து வருகிற 23- ஆம் தேதி வரை போலீஸாா் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றும் அவா் குறிப்பிட்டாா். இதன் மூலம் விபத்துகள் ஏற்படுவதை தடுத்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யமுடியும் என்றும் அவா் கூறினாா்.
இதேபோல காரில் பின்னிருக்கையில் அமா்ந்து செல்பவா்கள் பெல்ட் அணியாமல் செல்வதால் விபத்துகளின் போது அவா்களுக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. அவா்கள் சில நேரங்களில் உயிரிழக்க நேரிடுகிறது. இதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.
Advertisement
பின்னால் வரும் வாகனங்களைக் கவனித்து வண்டியோட்டும் வகையில் இரண்டு சக்கர வாகனங்களின் முன்பக்கத்தில் கண்ணாடி பொருத்தாமல் இருப்பது அவா்களின் பொறுப்பற்ற தனத்தை காட்டுகிறது. மேலும் இது ஆபத்தானது. பின்னால் வேகமாக வரும் வானங்களை கவனித்துச் செல்லாவிட்டால் விபத்துகள் உருவாக நேரிடும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.