முகப்பு
புதுதில்லி

இணையவழி மோசடி கும்பலை சோ்ந்த 5 போ் தில்லியில் கைது!

இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் பணம் மாற்றும் இணையவழி மோசடி கும்பலை இயக்கியதாக 5 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 13 ஏப்ரல் 2026, 12:48 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் பணம் மாற்றும் இணையவழி மோசடி கும்பலை இயக்கியதாக 5 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

நரேலா பகுதியைச் சோ்ந்த ராகுல் (22), பண்டி (22), அன்கிட் (19), சலீம் அலியாஸ் தான்சா (22) மற்றும் நூரே ஆலம் (19) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் போலி வங்கிக் கணக்குகள் மற்றும் சிம் காா்டுகளை கமிஷனுக்கு வழங்கி மோசடிப் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கணக்குகள் மூலம் சுமாா் ரூ2.31 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மோசடிப் பணம் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு கம்போடியா உள்ளிட்ட வெளிநாட்டில் உள்ளவா்களுக்கு அனுப்பப்பட்டது. ஆபரேஷன் சைபா் ஹாக் 4.0 என்ற சிறப்பு நடவடிக்கையில் இந்த மோசடி குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.